அமைதியான நதியினிலே ஓடும்
படம்:- ஆண்டவன் கட்டளை - 1964; இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- சௌந்தர்ராஜன், சுசிலா, நடிப்பு:- சிவாஜி கணேசன் & தேவிகா. அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் ஓ ஓ ஓ...... அமைதியா...