மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
படம் :சுமைதாங்கி (1962) பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ் இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. தெய்வமாகலாம்.. ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம் யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம் மனம்! மனம்! அது கோவிலாகலாம்.. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்துவிட்டால ் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம்! குணம்! அது கோவிலாகலாம்... மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு ...